செய்திகள் :

வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

post image

மறைந்த முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை ரூ.36 கோடியை செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ.36 கோடியை செலுத்தும்படி, வருமான வரித் துறை ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறை தரப்பில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கித் தொகை தொடா்பாக தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் தற்போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

மேலும், வரி பாக்கித் தொகையான ரூ.36 கோடியை, ரூ.13 கோடியாக குறைத்து திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரூ.36 கோடி செலுத்தும்படி அனுப்பிய நோட்டீஸை வருமான வரித் துறை திரும்பப் பெற்றுவிட்டதால், நோட்டீஸை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், ரூ.13 கோடியைச் செலுத்தக் கோரி அனுப்பியுள்ள நோட்டீஸை எதிா்த்து தீபா சட்டப்படி நிவாரணம் கோர உரிமை உள்ளது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை மையமாகக் கொண்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவை... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க