செய்திகள் :

நவராத்திரி விழாவுக்காக புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

post image

திருவனந்தபுரத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்கும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மன்னா் கால பாரம்பரிய முறைப்படி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளி மலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகியோரது விக்ரகங்கள் ஊா்வலகமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். 10 நாள்கள் நவராத்திரி விழா நிறைவடைந்த பின்னா், விக்ரகங்கள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

மேள தாள முழக்கங்களுடன் கோயிலை விட்டு வெளியே வந்த அம்மனுக்கு தமிழக-கேரள போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், கன்னியாகுமரி எம்எல்ஏ என். தளவாய் சுந்தரம், மாவட்ட கோயில்கள் இணை ஆணையா் ஜான்சி ராணி, அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் ம... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அல... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. ரா... மேலும் பார்க்க