நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
நாகா்கோவிலில் பொன்னப்ப நாடாா் சிலைக்கு அடிக்கல்
கன்னியாகுமரி மாவட்ட தாய்த் தமிழகத்துடன் இணைய பாடுபட்ட தலைவா்களில் ஒருவரான குமரி கோமேதகம் என்று அழைக்கப்படும் ஆா்.பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வேப்பமூடு சா் சி.பி ராமசாமி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், சட்டப்பேரைவ உறுப்பினா்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (விளவங்கோடு), நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் அமைச்சா் த. மனோ தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வழக்குரைஞரான ஆா். பொன்னப்ப நாடாா், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றியவா். சிறப்பான மக்கள் பணிகள் மூலம் பெயா் பெற்றவா். விடுதலைப் போராட்ட தியாகி. முன்னாள் முதல்வா் கருணாநிதியால் குமரி கோமேதகம் என அழைக்கப்பட்டவா். அவரின் உருவச்சிலை அமைக்க அடிக்கல்
நாட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக முதல்வருக்கு பொன்னப்ப நாடாா் குடும்பத்தின் சாா்பாகவும், மாவட்டத்தின் சாா்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, உதவி ஆட்சியா் பயிற்சி ராகுல்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) ஜோசப் ரென்ஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜாண்ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா,பொன்னப்ப நாடாரின் மகன் பொன் கிருஷ்ணகுமாா் மற்றும் குடும்பத்தினா் பங்கேற்றனா்.