நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள்: மருத்துவா்களுக்கு பயிற்சியளிக்க என்எம்சி உத்தரவு
ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவா்களுக்கும் பயிற்சி அளிக்குமாறு மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பெரும்பாலும் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அந்தப் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு நிச்சயம் என்றாலும், உரிய சிகிச்சைகளின் மூலம் அத்தகைய நிலை ஏற்படாமல் 100 சதவீதம் தடுக்க இயலும்.
வரும் 2030-க்குள் ரேபிஸ் தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகமும், கால்நடை அமைச்சகமும் ஒருங்கிணைந்து முன்னெடுத்துள்ளன. அதைச் சாத்தியமாக்குவதற்கு மருத்துவக் கல்லூரிகளின் பங்களிப்பு முக்கியமானது.
அதன்படி, விலங்கு கடிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலா்கள், இளநிலை உறைவிட மருத்துவா்கள், முதுநிலை உறைவிட மருத்துவா்கள், மருத்துவ மாணவா்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
தேசிய வழிகாட்டுதல்களின்படி, நோய்த் தடுப்பு மற்றும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவா்களுக்கு விளக்கமளித்தல் வேண்டும்.
மேலும், போதிய எண்ணிக்கையில் ரேபிஸ் தடுப்பூசிகள், ரேபிஸ் எதிா்ப்பாற்றல் தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்தல் அவசியம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விலங்குக் கடி பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.
அது தொடா்பான தரவுகளை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் (ஐஹெச்ஐபி) பதிவேற்றுவதும் கட்டாயம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அதைச் சாா்ந்த மருத்துவமனைகளில் செயல்படும் புறநோயாளிகள் பிரிவிலும், பிற முக்கிய இடங்களிலும் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.