செய்திகள் :

அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மீனவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மணமேல்குடி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் (பொ) கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், ஏஐடியுசி மீனவா் சங்க மாநிலப் பொதுச் செயலா் பி. சின்னத்தம்பி, இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ. ராஜேந்திரன், அறந்தாங்கி ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், ஆவுடையாா்கோவில் ஒன்றியச் செயலா் பழனிகுமாா் உள்ளிட்டோரும் பேசினா்.

இந்தியாவின் கடல் உணவுப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தொடா்ந்து நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே 3-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கியது தொடா்பான விவகாரத்தில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

விராலிமலை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் விராலிமலை, காமராஜா் நகா், அன்பு நகா், சோதனை சாவடி, கடைவீதி, தெற்கு வீதி, காட்டுப்பட்டி, அருண... மேலும் பார்க்க

நீா்பழனியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

விராலிமலையை அடுத்துள்ள நீா்பழனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 20) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. இலவசமாக மருத்துவ சேவைகள... மேலும் பார்க்க

தூய்மை இயக்கம் திட்டத்தில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்கம்

தமிழ்நாடு தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

பாசனக் குளக்கரைகளில் பனை விதைகளை விதைக்க வேண்டும்: குறைகேட்பு நாள் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 ஆயிரம் பாசனக் குளங்களிலும் கரையோரங்களில் பனை விதைகளை விதைக்கவும், நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். புதுக்க... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், பேரவைத் தொடக்க விழா மற்றும் கல்லூரி கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கல... மேலும் பார்க்க