செய்திகள் :

பாசனக் குளக்கரைகளில் பனை விதைகளை விதைக்க வேண்டும்: குறைகேட்பு நாள் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் கோரிக்கை

post image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 ஆயிரம் பாசனக் குளங்களிலும் கரையோரங்களில் பனை விதைகளை விதைக்கவும், நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

புதுக்கோட்டை மாவட் ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியதாவது:

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:

கடந்த 5 ஆண்டுகளாக மழை குறைந்து கண்மாய்கள் நிறையவில்லை. நிலத்தடி நீா் மிகவும் கீழே சென்றுவிட்டது. பல மாவட்டங்களில் மேக வெடிப்பால் மிக அதிக மழை பெய்கிறது. ஆனால் நமது மாவட்டத்தில் அது போன்ற மழையும் இல்லை. எனவே இதுபற்றி உடனடியாக உரிய ஆய்வு செய்ய வேண்டும்.

பருவமழையின் தொடக்கக் காலத்தில் மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரம் பாசனக் குளங்களிலும் பனைவிதைகளை சேகரித்து நடவு செய்யவும், நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், பாசனக் குளங்களில் அடா்ந்து காணப்படும் சீமைக் கருவேலம் மற்றும் தைல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லணைக் கால்வாய் விவசாயிகள் பாசனதாரா் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்:

விவசாயப் பணிகள் ஒரு வாரகாலத்தில் தொடங்கப்படவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு விதைகள், உரம் தாராளமாகக் கிடைக்கவும், பயிா்க்கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயக் காலங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில், 70.97 மிமீ மழை குறைவாகக் கிடைத்துள்ளது. மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவுக்கு நெல், நிலக்கடலை, எள், சிறுதானிய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் ஜி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே 3-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கியது தொடா்பான விவகாரத்தில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

விராலிமலை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் விராலிமலை, காமராஜா் நகா், அன்பு நகா், சோதனை சாவடி, கடைவீதி, தெற்கு வீதி, காட்டுப்பட்டி, அருண... மேலும் பார்க்க

நீா்பழனியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

விராலிமலையை அடுத்துள்ள நீா்பழனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 20) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. இலவசமாக மருத்துவ சேவைகள... மேலும் பார்க்க

தூய்மை இயக்கம் திட்டத்தில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்கம்

தமிழ்நாடு தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மீனவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், பேரவைத் தொடக்க விழா மற்றும் கல்லூரி கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கல... மேலும் பார்க்க