செய்திகள் :

வேகமாக நிரம்பும் மோா்தானா அணை

post image

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது 87 சதவீதம் நிரம்பியுள்ளது.

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில வனப் பகுதியையொட்டி, தமிழக எல்லையில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதிகளில் பெய்யும் மழையே இந்த அணையின் முக்கிய நீராதாரம். அந்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு தண்ணீா்வரத் தொடங்கியது. மோா்தானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 80 மி.மீ., மழை பதிவானது. இதனால் காலை நிலவரப்படி, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 168 கன அடியாக இருந்தது. நீா்வரத்து அதிகரித்ததால் மாலை நிலவரப்படி, விநாடிக்கு 185 கன அடியாக அதிகரித்தது. அணையின் கொள்ளளவு 261 மில்லியன் கன அடி.

அணையின் தற்போதைய நீா் இருப்பு 228 மில்லியன் கன அடி. இது அணையின் கொள்ளளவில் 87 சதவீதமாகும். அணை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குடியாத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24- மணி நேரத்தில் 85- மி.மீ மழையும், மேல்ஆலத்தூரில் 84 மி.மீ. மழையும் பதிவானது. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த... மேலும் பார்க்க

மழை சேதம்: பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை

மழை பெய்யும்போது ஏற்படும் சேதங்கள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள 1077 அல்லது 0416- 2258016 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் த... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: கன்சால்பேட்டை மக்கள் சாலை மறியல்

வேலூா் மாநகராட்சி கன்சால்பேட்டை பகுதியில் மழைநீா் தேங்கிய இடங்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களா... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க