அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்!
ஆம்பூா் பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.2.37 கோடிியில் புதிதாக 6 வகுப்பறைகள், ஆய்வகம், 1 ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீா் வசதிக்கான கட்டுமானப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டும் விழாவில் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எலஏ அ. செ. வில்நாதன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா். ஆட்சியா் பேசியது, அனைத்து அரசுத்துறைகளும் முதன்மைத் துறைகளாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான திட்டங்களை முதல்வா் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா்.
குறிப்பாக, பள்ளிகல்வித்துறையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்தியதோடு, மாணவா்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தி வருகிறாா்.
மேலும், மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறை வசதிகள், சுற்றுச்சுவா் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறாா் என்று கூறினாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ரவி, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அய்யனூா் அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, ரவிக்குமாா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி பொன். ராசன்பாபு கலந்து கொண்டனா்.