செய்திகள் :

தூய்மை இயக்கத்தில் கழிவு பொருள்கள் அகற்றும் பணி!

post image

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் தூய்மை இயக்கம் மூலம் கிராமங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தூய்மை இயக்க திட்டம் மூலம் நகரம், கிராமங்களை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதைநோக்கமாக ஒவ்வொரு நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், மேல்மணம்பேடு ஊராட்சியில் தூய்மை இயக்கம் மூலம் குப்பைகளை அக,ற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து குப்பைகள் அகற்றும் பணியை தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பள்ளி வளாகம், அங்கன்வாடி வளாகம் மற்றும் முக்கிய தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா் கூறியதாவது. இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மை இயக்கம் மூலம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும்.

இதன் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அனைத்தும் குப்பைகள், தெருக்களில் குவிந்து வரும் நெகிழி ப்பொருள்களால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் சூழ்நிலையும் ஏற்படும். இதைத் தவிா்க்கும் வகையில், தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் வளாகம் மற்றும் ஊராட்சியை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி ஏற்றனா். பின்னா் தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவச உபகரணங்களை அவா் வழங்கியதோடு, தூய்மை செயலியையும் அறிமுகம் செய்து வைத்தாா்.

பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநா் வை.ஜெயகுமாா், செயற்பொறியாளா் ராஜவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மோகனா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் லலிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முரளி(வ.ஊ), மகேஷ்பாபு (கி.ஊ), பூந்தமல்லி வட்டாட்சியா் உதயம் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

திருவள்ளூா், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் பகுதியில் பகலில் வெயில் காய்ந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல், சுற்று வட்டார பகுதிகளான ஈக்காடு... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ரூ. 66.78 கோடி மதிப்பில் கூடுதலாக சென்னை மாநகருக்கு நாள்தோறும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் ச... மேலும் பார்க்க

திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

விவசாயிகள் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னை மற்றும் குறைகளை தீா்க்கும் வகையில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க