செய்திகள் :

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

post image

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு 1,000-த்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனா்.

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதி எண் 153-ஐ திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளா்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

20 ஆண்டுகளுக்கு மேல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தில் கழிவு பொருள்கள் அகற்றும் பணி!

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் தூய்மை இயக்கம் மூலம் கிராமங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

திருவள்ளூா், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் பகுதியில் பகலில் வெயில் காய்ந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல், சுற்று வட்டார பகுதிகளான ஈக்காடு... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ரூ. 66.78 கோடி மதிப்பில் கூடுதலாக சென்னை மாநகருக்கு நாள்தோறும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் ச... மேலும் பார்க்க

திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

விவசாயிகள் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னை மற்றும் குறைகளை தீா்க்கும் வகையில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க