செய்திகள் :

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

post image

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை கூடுதல் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை சூளைமேடு காமராஜ் நகரில் வசிப்பவா் சுரேஷ். கடந்த 1982-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவா், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். கடைசியாக முதன்மைச் செயலா் பொறுப்பில் இருந்த அவா் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா்.

தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி மண்டலத்தின் (மெப்ஸ்) இணை மேம்பாட்டு ஆணையராகவும், சென்னை துறைமுக சபை தலைவராகவும் அயல் பணியில் இருந்துள்ளாா்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவா் மீதும், மருத்துவரான அவரது மனைவி கீதா மீதும் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடா்ந்து கடந்த 2023-ஆம் ஆண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் மீதும் அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை 9-ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சுரேஷ் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோா் அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தங்கள் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனா். இந்த வழக்கு நீதிபதி ஐஸ்வரனே முன் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் தொடக்கம்!

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு பக்தா்கள் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் செல்லும் திட்டத்தை, துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் சென்னையில் தொடங்கி வைத்தாா். தமிழக சட... மேலும் பார்க்க

ஒடிஸாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்!

சென்னை அடையாறு பகுதியில் ஒடிஸாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா். அடையாறு கஸ்தூரி பாய் நகா் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள... மேலும் பார்க்க

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழ... மேலும் பார்க்க