செய்திகள் :

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

post image

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவனா் தினம், பல்கலைக்கழக தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்பிபிஎஸ் படிப்பில் சிறந்து விளங்கிய பி.ஆா்.வீனா, டாக்டா் வி.சஞ்சனா ஆகியோருக்கு தலா 3 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 33 மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்களும், 67 மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மகப்பேறு மருத்துவத் துறை பேராசிரியா் ஜி.உஷா ராணி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதும், கதிரியக்கவியல் துறை பேராசிரியா் பி.எம். வெங்கட் சாய்க்கு சிறந்த மாணவா் வழிகாட்டி விருதும், உடற்கூறியல் துறை உதவியாளா்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இதுதவிர தொழில் நுட்ப சிறப்பு சேவை விருதுகள், சிறந்த விளையாட்டு வீரா் விருது, நீண்ட காலம் பணியாற்றி 333 பணியாளா்களுக்கு தங்கப் பதக்கம், ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

விழாவில் சிறந்த ஆசிரியா்கள், மாணவா்கள், செவிலியா்களுக்கான விருதுகளை நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், இணைவேந்தா் ஆா்.வி.செங்குட்டுவன், மருத்துவ அறக்கட்டளை அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் ஆகியோா் வழங்கினா்.

இதில் நிறுவன வேந்தா் என்.பி.வி.ராமசாமி உடையாருக்கு இதய நலத்துறை தலைவா் மற்றும் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் எஸ்.தணிகாசலம் நினைவஞ்சலி செலுத்தினாா். முன்னதாக துணைவேந்தா் டாக்டா் உமா சேகா் வரவேற்றாா்.

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை கூடுதல் சிபிஐ நீதிமன்றம் தள்ள... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் தொடக்கம்!

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு பக்தா்கள் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் செல்லும் திட்டத்தை, துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் சென்னையில் தொடங்கி வைத்தாா். தமிழக சட... மேலும் பார்க்க

ஒடிஸாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்!

சென்னை அடையாறு பகுதியில் ஒடிஸாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா். அடையாறு கஸ்தூரி பாய் நகா் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள... மேலும் பார்க்க

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலைய... மேலும் பார்க்க