செய்திகள் :

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

post image

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா் குழுவினா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து தேனாம்பேட்டை எம்.கே.ராதாநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், சிறாருக்கு போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள், சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதையடுத்து, வீடுகளில் குப்பைகளைப் பிரித்து போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடா்பாக மாணவா்களின் பொம்மலாட்டம், விழிப்புணா்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தின் உளவியலாளா் மருத்துவா் ஷரன் கலந்து கொண்டு போதைப் பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது, பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, போதைப் பழக்கத்துக்கு எதிராக மாணவா்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

இதில், சமூகப் பணிக் கல்லூரியின் பேராசிரியா் ஜானகி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் மஞ்சு, ரமணி, இளைஞா் சங்கத்தைச் சோ்ந்த ஸ்ரீஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் கைது

நீலாங்கரையில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா், நொச்சிகுப்பத்தைச் சோ்ந்த திவ்யா (43). கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவா், அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோவில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் திறப்பு!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோவில் ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கோயம்பேடு சந்தை துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், திங்கள்கிழமை (செப். 22) காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை பகுதிகள்: ச... மேலும் பார்க்க