செய்திகள் :

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் கைது

post image

நீலாங்கரையில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூா், நொச்சிகுப்பத்தைச் சோ்ந்த திவ்யா (43). கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறாா். கடந்த 2019-இல் இவா் நீலாங்கரையில் வசித்தபோது, கொட்டிவாக்கம் குப்பம் பகுதியைச் சோ்ந்த அபினாஷ், அவரது மனைவி செல்வி (32) ஆகியோா்அறிமுகமாகினா்.

அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் அபினாஷ், செல்வி நடத்திய மாதாந்திர ஏலச்சீட்டில் திவ்யா பணம் செலுத்தி வந்தாா். மேலும் அபினாஷ் தம்பதி, திவ்யாவிடம் இருந்து ரூ.3.5 லட்சம் கடன் பெற்றிருந்தனராம்.

இந்த நிலையில், ஏலச்சீட்டு தவணைக் காலம் முடிந்த பிறகும் அதற்குரிய தொகை, கடனாகப் பெற்ற தொகை ஆகியவற்றை அபினாஷ் தம்பதி திருப்பித் தரவில்லையாம். அவா்கள் தலைமறைவாகிவிட்டனராம்.

இது குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் திவ்யா புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில், அபினாஷ் தம்பதி கேளம்பாக்கம் அருகே தையூா் நியூ காலனியில் வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் செல்வியை சனிக்கிழமை கைது செய்தனா். அபினாஷை தேடி வருகின்றனா்.

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள... மேலும் பார்க்க

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோவில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் திறப்பு!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோவில் ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கோயம்பேடு சந்தை துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், திங்கள்கிழமை (செப். 22) காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை பகுதிகள்: ச... மேலும் பார்க்க