செய்திகள் :

திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

post image

விவசாயிகள் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னை மற்றும் குறைகளை தீா்க்கும் வகையில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், விவசாயம் தொடா்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காணும் வகையில் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வரும் செப். 26-இல் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம்ஸ, கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

அதனால், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, சாகுபடி மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து நேரிலோ அல்லது மனுக்களாகவோ அளித்து பயன்பெறலாம்.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தில் கழிவு பொருள்கள் அகற்றும் பணி!

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் தூய்மை இயக்கம் மூலம் கிராமங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ்... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

திருவள்ளூா், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் பகுதியில் பகலில் வெயில் காய்ந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல், சுற்று வட்டார பகுதிகளான ஈக்காடு... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ரூ. 66.78 கோடி மதிப்பில் கூடுதலாக சென்னை மாநகருக்கு நாள்தோறும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் ச... மேலும் பார்க்க

பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க