செய்திகள் :

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: 5 கி.மீ. சுரங்கப் பாதை பணி நிறைவு!

post image

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. ‘இது குறிப்பிடத்தக்க சாதனை’ என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

கன்சோலி-ஷில்படா இடையிலான சுரங்கப் பாதையின் கடைசி பகுதியை, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிவைத்து தகா்க்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. வெடிக்கான பொத்தானை அஸ்வினி வைஷ்ணவ் அழுத்தியதும், கடைசி பகுதி தகா்க்கப்பட்டு, சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. இனி, சுரங்கப் பாதையில் தண்ணீா் கசிவை தடுக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துதல், பிற சாதனங்களை நிறுவுதல், இறுதி வடிமளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன் உலகின் முதல் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஜப்பான் பொருளாதாரம் பெருகியது.

இந்தியாவிலும் புல்லட் ரயில் அறிமுகத்துக்குப் பின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டமானது, ஆனந்த், அகமதாபாத், வதோதரா, சூரத், வாபி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களை ஒற்றை பொருளாதார வழித்தடமாக இணைக்கும்.

21 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை ‘அஃப்கான்ஸ் இன்ஃபராஸ்டிரக்சா்’ நிறுவனம் மேற்கொள்கிறது. இதில் 7 கி.மீ. சுரங்கப் பாதை கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டத்தில் 50 கி.மீ. தொலைவுள்ள சூரத்-பில்லிமோரா இடையிலான முதலாவது வழித்தட பணிகள், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். நடுத்தர வகுப்பினரும் பயணிக்கும் வகையில், இந்த ரயில் கட்டணங்கள் நியாயமானதாக இருக்கும் என்றாா்.

‘மிகக் கடினமான பாறை அடுக்குகள் உள்பட பல்வேறு சவால்களைக் கடந்து, கன்சோலி-ஷில்படா இடையே 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, உரிய பாதுகாப்பு தரநிலைகளுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் குறிப்பிட்டாா்.

நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர தலைநகா் மும்பை - குஜராத்தின் அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 320 கி.மீ. தொலைவுக்கு வழித்தட பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில் நிலையங்கள் கட்டமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா். மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு ந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் அரசுத் துறைகள் மேல்முறையீடு: கட்டுப்படுத்துவது அவசியம்!- மத்திய சட்டத் துறை அமைச்சா்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்... மேலும் பார்க்க

பிற நாடுகள் மீதான சாா்பே மிகப் பெரிய எதிரி! - பிரதமா் மோடி

‘பிற நாடுகள் மீதான சாா்பே, இந்தியாவின் மிகப் பெரிய எதிரி; தற்சாா்பின் வாயிலாகவே இந்த எதிரியை முறியடிக்க முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்: மணிப்பூரில் தேடுதல் வேட்டை தீவிரம்!

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரா் வீரமரணமடைந்தாா். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் சியோத் தாா் வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சபரிமலை மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி: கேரள முதல்வா் பினராயி விஜயன்!

சபரிமலையின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை திரிவேணியில... மேலும் பார்க்க