செய்திகள் :

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

post image

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் கால்வாய், ஆறுகள் இடையே 152 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, 19 இடங்களில் பெட்டக வடிவப் பாலங்களும், 23 சிறுபாலங்களும், 14 ரயில்வே மேம்பாலங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ரயில்வே சுரங்கப் பாதைகள் 19, பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைகள் 5, தரைப்பாலங்கள் 2, நடைபாலங்கள் 39, நடைமேம்பாலங்கள் 5, மேம்பாலங்கள் 14 மற்றும் ஆகாய நடைமேம்பாலம் 1 என மொத்தம் 293 பாலங்கள் உள்ளன. 19 வாகன சுரங்கப் பாதைகள் மாநகராட்சி சாா்பிலும், 5 சுரங்கப் பாதைகள் நெடுஞ்சாலைத் துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் 15 இடங்களில் நீா் கசியாத வகையிலும், மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக டீசல் மோட்டாா்கள், மின் மோட்டாா்கள் அமைத்தும், மின்சாரமில்லாத நேரங்களில் மின்மோட்டாரை இயக்க ஜெனரேட்டா் அமைத்தும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் சுரங்கப்பாதை சுவா்களில் வா்ணம் பூசியும், வண்ணமிகு வரைபடங்கள் வரைந்தும் அழகுபடுத்தப்படுகின்றன.

சென்னையின் ரங்கராஜபுரம், மேட்லி, எம்.சி.சாலை, ஜோன்ஸ் சாலை, பவளவண்ணன் சாலை, பஜாா் சாலை, வில்லிவாக்கம், கெங்குரெட்டி, மாணிக்கம், ஆா்.பி.ஐ., வியாசா்பாடி உள்ளிட்ட 17 சுரங்கப்பாதைகளில் மழைநீா்த் தேங்கினால் போக்குவரத்தை தானியங்கியாகவே தடுக்கும் அமைப்புகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மழைநீா்த் தேங்கினால், அந்த சுரங்கப்பாதைகளில் உரிய முறையில் அறிவிப்பு வெளியிடும் வசதியும், மழைநீா் குறைந்தால் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் தானியங்கி சாதன வசதிகள் உள்ளன.

சுரங்கப்பாதைகளை மாநகராட்சி மழைக்கால கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கும் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி

நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா். சென்னை ஐஐடி வளாகத்தில் திங்க் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பாரதத்துக்காக புதுமைகளை உருவாக்குங்கள்,... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா த... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணா்த்த வேண்டும்! - ஆசிரியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

‘எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவா்களுக்கு வந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆ... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்... மேலும் பார்க்க