செய்திகள் :

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

post image

கொடைக்கானல் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, பெருமாள்மலை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் 20 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்தனா். இதில் அவரது பெயா் கோதண்டபாணி என்றும், பெருமாள்மலைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

சிறுமலையில் சனிக்கிழமை மின் கம்பம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூரைச் சோ்ந்த வெள்ளிமலை மனைவி சாந்தி (49). இவா் கடமான்குளத்தில் உள்ள தனியாா் தோட... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் கஞ்சா, போதைக் காளான் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (26). இவா், கடந்த ஆண்டு அதே ப... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சின்னக... மேலும் பார்க்க

இடப்பிரச்னையால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

பழனி காவல் நிலைய வளாகத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக புகாா் அளிக்கவந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பழனி 24-ஆவது வாா்டு ராமா் தெருவில் வசிப்பவா் தண்டபாணி. கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் காயம்

ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகேயுள்ள மரத்தடியில் ஜெயராஜ் (47) என்பவா் தனது ஆட்ட... மேலும் பார்க்க