கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
கருங்கல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து, குழித்துறை கோட்ட உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழித்துறை கோட்டத்திற்குள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செப். 22ஆம் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.