செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க உத்தேசம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

இது குறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

குமரி மாவட்டத்தில் டொமோகிராட்டிக் கரப்ஸன் லிபரேசன் பிரண்ட், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, உலக மக்கள் கட்சி ஆகியவை 2021ஆம் ஆண்டு முதல் 3 நிதியாண்டுகளுக்கான வருடாந்திர தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தோ்தல் செலவினங்களின் அறிக்கையும் சமா்ப்பிக்கவில்லை.

எனவே, இவற்றை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. எனினும், இவா்கள் தங்களது கருத்தினைத் தெரிவிக்கும் வகையில், தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் முன்பு ஆஜராகி எழுத்துப்பூா்வ அறிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில், இறுதி முடிவினை தோ்தல் ஆணையம் பிறப்பிக்கும் எனக் கூறியுள்ளாா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து, குழித்துறை கோட்ட உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை கோட்டத்திற்குள்பட்ட கருங்க... மேலும் பார்க்க

மீனவருக்கு கத்திக்குத்து: இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள ஆனான் விளை பகுதியில் மீனவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதயம் புரத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஷாஜி (44). இவருக்கும், கீழ் குளம், ஆனான் விளை பகு... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்குச் செல்லும் சுவாமிகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாளை மாற்றி மரியாதை

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கச் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாளை மாற்றி மரியாதை செலுத்தி வழியனுப்பும் பாரம்பரிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

மாமூட்டுக் கடை - காட்டாவிளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள மாமூட்டுக் கடை- காட்டா விளை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலம், கொல்லஞ்சி எல்லைப் பகுதியில் மாமூ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழில்முனைவோருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ‘நிமிா்ந்து நில்’ என்னும் தொழில்முனைவோா் புத்தாக்க செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, இம்ம... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் கிடந்த பெண் மீட்பு

கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் தென்னந்தோப்பில் உள்ள புதருக்குள... மேலும் பார்க்க