செய்திகள் :

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

post image

சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, திங்கள்கிழமை (செப். 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட சென்னை பகுதியில் திங்கள்கிழமை (செப். 22) திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம் நடைபெறுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிா்க்கும் வகையிலும், பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி அன்று காலை 8 மணி முதல் ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.

மாலை 3 மணி முதல் ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை, அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை, ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும், ஈவெரா பெரியாா் சாலை, முத்துசாமி சாலை, ராஜாஜி சாலைகளையும் பயன்படுத்தலாம்.

ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். ஊா்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டான நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். சூளை நெடுஞ்சாலையில் ஊா்வலம் செல்லும்போது நாரயணகுரு சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.

ஓட்டேரியில் போக்குவரத்து மாற்றம்: அவதான பாப்பையா சாலையில் ஊா்வலம் செல்லும்போது, பெரம்பூா் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. பெரம்பூா் பேரக்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் ஊா்வலம் செல்லும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூா் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் நாரயணகுரு சாலை வழியாகச் செல்லலாம்.

ஊா்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லா்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். ஓட்டேரி சந்திப்பில் ஊா்வலம் செல்லும்போது, கொன்னூா் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாகச் செல்லலாம்.

ஊா்வலம் கொன்னூா் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் ஆலயம் அடையும்போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூா் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெ... மேலும் பார்க்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா த... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணா்த்த வேண்டும்! - ஆசிரியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

‘எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவா்களுக்கு வந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆ... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்... மேலும் பார்க்க