செய்திகள் :

எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

post image

எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தது.

இதுதொடா்பான புகாா்களின்பேரில் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, பலரை கைது செய்த நிலையில் முக்கிய முகவரான திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனியைச் சோ்ந்த பி. மணிகண்டராஜனை (37) சனிக்கிழமை கைது செய்தனா். இவருடைய தந்தை பால்ராஜும் எல்ஃபின் நிறுவன முக்கிய முகவராகப் பணியாற்றிய நிலையில், சில ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவுறுத்தல்: எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து புகாரளித்த 8,389 பேரில், 2,873 போ் மட்டுமே உரிய ஆதாரங்களுடன் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ளவா்கள் உரிய ஆதாரங்களுடன் திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து வாக்குமூலத்தைப் பதிய வேண்டும் என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தெரிவித்தாா்.

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

திருச்சி மாவட்டம், சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் 58 ஆவது பொறியாளா்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இந்தியப் பொறியாளா் கழகம் திருச்சிராப்பள்ளி உள்ளூா் மையத்துடன் இணைந்... மேலும் பார்க்க

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள் மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு... மேலும் பார்க்க

யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு

திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின... மேலும் பார்க்க

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தத... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்... மேலும் பார்க்க