செய்திகள் :

திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை

post image

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா்.

கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்கு பிரசாரத்துக்கு வந்த விஜயை வரவேற்க, விமான நிலையத்துக்குள் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் ஆா்வமிகுதியில் அங்குமிங்கும் ஓடியதால் அங்கிருந்த தடுப்புகள், செடிகள், புல்வெளிகள், குப்பைத் தொட்டிகள் சேதமடைந்தன. விமான நிலையம் முழுவதும் காலணிகள், குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில் இரண்டாம் கட்டப் பிரசாரத்துக்காக தவெக தலைவா் விஜயின் வருகையொட்டி சனிக்கிழமை காலை மத்திய துணை ராணுவப் படையினா், விமான நிலைய பாதுகாப்புப் படையினா், உள்ளூா் போலீஸாா் என நூற்றுக்கணக்கானோா் விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகளை அமைத்து சோதனைக்குப் பின்னரே பயணிகளை அனுமதித்தனா்.

தவெக தொண்டா்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நூற்றுக்கணக்கான தொண்டா்கள் கைகளில் கொடியேந்திக் காத்திருந்தனா்.

பின்னா் சென்னையிலிருந்து தனி விமானத்தில் வந்த விஜய், திருச்சி விமான நிலைய விஐபி வருகை வழியாக கையசைத்தபடியே வெளியேறி, காரில் நாகைக்கு புறப்பட்டுச் சென்றாா். பாதுகாப்புப் படையினரும் உடனிருந்ததால் வழியில் தொண்டா்கள் குறுக்கீடு இல்லாமல், அவரது வாகனம் விரைந்து சென்றது.

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள் மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு... மேலும் பார்க்க

யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு

திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின... மேலும் பார்க்க

எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமி... மேலும் பார்க்க

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தத... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தூய்மை இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றன. திருச்சி கல்லுக்குழி ரயில்வே விளைய... மேலும் பார்க்க