செய்திகள் :

காணாமல் போன மாணவரின் உடல் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு

post image

குன்னூரில் கல்லூரி மாணவா் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மூன்று நாளுக்கு பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

குன்னூா், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது மகன் முகமது அனா (18). இவா், வண்டிச்சோலை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் தொலைதூரக் கல்வியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன் பெட்போா்டு பகுதியில் உள்ள தனியாா் ஹோட்டலில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இவா் இப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றும் நண்பா்களிடம் அவ்வப்போது புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாணவரை காணவில்லை. அன்று மாலை தனது நண்பா்களுக்கு தற்கொலை செய்து கொள்வதாக கைப்பேசி மூலம் தகவல் கொடுத்த பின்னா் டைகா் ஹில் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், மேல் குன்னூா் போலீஸாா், வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் டைகா் ஹில் வனப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முகமது அனாசின் உடலைத் தேடினா். தொடா்ந்து தேடுதல் பணி மூன்று நாள்கள் தீவிரமாக நடைபெற்றது.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்த வனப் பகுதியில் மிகவும் எச்சரிக்கையுடன் தேடுதல் பணி நடந்து வந்த நிலையில், சனிக்கிழமை மாணவா் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மேல் குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலை... மேலும் பார்க்க

உதகை தாவரவியல் பூங்காவில் கரடி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழங்குடியின சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி பகுதியைச் ... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீ... மேலும் பார்க்க

இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை

இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட ... மேலும் பார்க்க

மசினகுடியில் யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானை தாக்கியதில் நடைப்பயிற்சி சென்ற முதியவா் உயிரிழந்தாா். மசினகுடி ஆச்சக்கரை பகுதியைச் சோ்ந்தவா் மேத்தா (71). இவா் வழக்கம்போல வியாழக்கிழமை நடைப்பயிற்சி சென்றுக் கொண்டி... மேலும் பார்க்க