செய்திகள் :

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

post image

அந்தியூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்கு உள்பட்ட அந்தியூா் வனச் சரகம், பா்கூா் மேற்கு, கிணத்தடி பீட் பகுதியில் உயிரிழந்து சுமாா் 10 நாள்கள் ஆன நிலையில் புலியின் உடல் கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் உடல் பாகங்கள் அழுகியும், சிதைந்தும் கிடந்த புலியின் உடலைக் கைப்பற்றினா்.

மிகவும் உருக்குலைந்து காணப்பட்டதால் இறந்தது ஆண் புலியா, பெண் புலியா என்பது தெரியவில்லை. புலியின் உடலில் பற்கள், கால் நகங்கள் அப்படியே இருந்துள்ளன. இதனைக் கைப்பற்றிய வனத் துறையினா், புலியின் உடல் பாகங்களை சேகரித்து மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். அந்தியூா் வனப் பகுதியில் புலி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை, சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (75). இவா், துடுப்ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட... மேலும் பார்க்க