செய்திகள் :

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடக்கம்!

post image

புரட்டாசி மாதத்தினையொட்டி காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 50 பக்தர்களை வைணவ ஆன்மிக தல சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடுகள், அம்மன் திருத்தலங்கள் மற்றும் புரட்டாசி மாதத்தை ஒட்டி வைணவ தல திருத்தங்களை கட்டணமின்றி பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் 50 பக்தர்கள் இலவசமாக காஞ்சிபுரத்தில் நான்கு திருத்தலங்களும், ஸ்ரீபெரும்புதூரில் ஒரு திருத்தலங்கள் என ஐந்து திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதன் தொடக்க நிகழ்வு இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமராதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அடையாள அட்டை,குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களுடன் கூடிய பை வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார்.

சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா, செயல் அலுவலர்கள் ராஜலக்ஷ்மி, செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வ... மேலும் பார்க்க

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் நபோலியை வெள்ளிக்கிழமை சாய்த்தது. அந்த அணிக்காக எர்லிங் ஹால்ந்த் 56-ஆவது நிமிஷத்திலும், ஜெரிமி டோகு 65-ஆவது நிமிஷத்திலும் கோல... மேலும் பார்க்க

ஓமனை போராடி வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் ச... மேலும் பார்க்க

ஹரியாணாவுக்கு 5-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஹரியாணா அணி 21 ரெய்டு, 8 டேக்கிள், 2... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியது: ஐசிசி குற்றச்சாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஆட்டத்துக்கு முன்பான நிகழ்வுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறிச் செயல்பட்டதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இது... மேலும் பார்க்க

வெண்கலம் வென்றாா் அன்டிம் பங்கால்

குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்ட அன்... மேலும் பார்க்க