செய்திகள் :

Trump: ``சீன அதிபருடன் போன்கால்; நான் சீனா செல்கிறேன், ஜி அமெரிக்கா வருவார்'' - ட்ரம்ப் சொல்வதென்ன?

post image

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.

ட்ரம்ப் பதிவு

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சீன அதிபர் ஜி உடன் பயனுள்ள போன்காலைப் பேசி முடித்திருக்கிறேன்.

வர்த்தகம், ஃபென்டனில், ரஷ்யா, உக்ரைன் போர் முடிவு, டிக்டாக் ஒப்பந்தத்தின் அனுமதி உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

தென்கொரியாவில் நடக்க உள்ள APEC உச்சி மாநாட்டில் அதிபர் ஜியை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நான் சீனா செல்ல உள்ளேன். அதே மாதிரி, அதிபர் ஜியும் உரிய நேரத்தில் அமெரிக்கா வருவார். போன்கால் மிக நன்றாகச் சென்றது.

நாங்கள் மீண்டும் போன்காலில் உரையாடுவோம். டிக்டாக் ஒப்புதலுக்கு நன்றி, நாங்கள் இருவரும் APEC உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொள்ள ஆவலாக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஜின்பிங் என்ன பேசினார்?

சீன அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் சின்ஹுவா தகவலின்படி, சீன அதிபர் ஜின்பிங் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவு குறித்து வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா ஒருதலைப்பட்ச வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பேசினார் என்று கூறப்படுகிறது.

டிக்டாக் வர்த்தக ஒப்பந்தத்தில் என்னென்ன முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அமெரிக்கா, இஸ்ரேல் உறவில் விரிசல்; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் பேசினாரா ட்ரம்ப்? - என்ன நடந்தது?

கோபத்தில் உலக நாடுகள்!பாலஸ்தீனத்தின் மீதான தனது தாக்குதலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலால் மட்டுமல்லாமல், உணவு சென்றடையாமலும் பாலஸ்தீனத்தில் பலர் மடிகிறார்கள். இஸ்ரேல் பிரதமர் நெ... மேலும் பார்க்க

Nepal: Gen Z போராட்டத்துக்குப் பிறகான முதல் அறிக்கை; இந்தியாவை இழுத்த ஒலி? - என்ன சொல்கிறார்..?

நேபாளம் நாட்டில் நடந்த ஜென் Z போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் அரசியலமைப்பு தினமான வெள்ளிக்கிழமை (செப் 19) முதன்முறையாக பொது அறிக்கையை வெளியிட்ட முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, அதில் இந்தியாவை... மேலும் பார்க்க

"காஸாவில் நடக்கும் போருக்கு மோடியும் காரணம்" - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்

பாலஸ்தீனம் மீது சுமார் இரண்டு ஆண்டுகளாக (2023 அக்டோபர் முதல்) இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது.இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 65,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக 19,000-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெக-வுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வந்தார். அவர் தவெக-வ... மேலும் பார்க்க

தவெக: "கம்பங்களில் ஏறக் கூடாது, கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்"- தொண்டர்களுக்கு `12' நெறிமுறைகள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வதன் பகுதியாக நாளை (செப் 20 - சனிக்கிழமை) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கவுள்ளார். காலை 10 மணி அளவ... மேலும் பார்க்க

`திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட் தவளையும் இல்லை; பாஜகவே அதிமுகவை விழுங்கி கொண்டிருக்கிறது'- வாசுகி

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு... மேலும் பார்க்க