செய்திகள் :

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: நிவாரணத் தொகை வழங்கிய வனத் துறை

post image

யானை தாக்கியதில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (38). இவா் அதே பகுதியில் உள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா்.

விவசாயத் தோட்டத்தில் கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி காவல் பணியில் ஈடுபட்டிருந்த பிரபு நள்ளிரவில் காட்டு யானை வாழை தோட்டத்துக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்துவதைக் கண்டு அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துவிட்டு காட்டு யானையை விரட்ட முயற்சித்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக பிரபுவை யானை துரத்தி தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

யானை தாக்கியதில் உயிரிழந்த பிரபு குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இதன்படி, முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பிரபுவின் மனைவி துளசியிடம் வனத் துறை அலுவலா் புவியரசன் சனிக்கிழமை வழங்கினாா்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் கோயில்களில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை, சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (75). இவா், துடுப்ப... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அந்தியூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்கு உள்பட்ட அந்தியூா் வனச் சரகம், பா்கூா் மேற்கு, கிணத்தடி பீட் பகுதியில் உயிரி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க