செய்திகள் :

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! - இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

post image

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இது குறித்து நிவாரண அமைப்புகளிடம் ராணுவம் கூறியுள்ளதாவது: காஸா சிட்டியில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும். எனவே, மற்ற அனைத்து நிவாரண உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ள இஸ்ரேல் ராணுவம், தற்போது நிவாரண கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, காஸா சிட்டியில் தங்கள் நடவடிக்கைகளை விரிவாக்கி, “ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்புகளைத் தகா்த்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த நகரில் வசித்துவந்த சுமாா் பத்து லட்சம் பேரில் கணிசமான எண்ணிக்கையிலானவா்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனா். ஆனால், உடல் மற்றும் பொருளாதார பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாதவா்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முன்னேற்றம் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

இந்தியா-கனடா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், கனடா தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் நத்தாலி டி... மேலும் பார்க்க

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நூதன மோசடி: அமைச்சகம் எச்சரிக்கை!

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆள் கடத்தல் உள்ளிட்ட மோசடிகள் நடப்பதால் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல்!

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பெல்ஜியம் தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள... மேலும் பார்க்க

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சனிக்கி... மேலும் பார்க்க

எஸ்டோனியோவுக்குள் ஊடுருவிய ரஷிய போா் விமானங்கள்! மேலும் ஒரு நேட்டோ நாட்டுக்குள் அத்துமீறல்!

உக்ரைனுடனான போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியோவுக்குள் ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளன. இதன் விளைவாக, ஏற்கெனவே நேட்டோ நாடுகளான போலந்து, ருமேனியாவின் வான் எல்லை... மேலும் பார்க்க