செய்திகள் :

தலைமறைவு கிரிமினல் என்கவுன்ட்டருக்கு பின் கைது

post image

தலைமறைவாக இருந்துவந்த கொலைக் குற்றம்சாட்டப்பட்ட நபரை வடமேற்கு தில்லி முனக் கால்வாய் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் வடமேற்கு பீஷம் சிங் கூறியது:

ரகசிய தகவலின் அடிப்படையில், ஏயூ பிளாக் அருகே அதிகாலை 1 மணியளவில் குட்டு (23) என்ற குற்றம்சாட்டப்பட்டவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அவரை சரணடையுமாறு கேட்டுக்கொண்டனா். அப்போது, அவா் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாா் மீது சுட்டாா். அதில், ஒரு தோட்டா ஒரு காவலரின் குண்டு துளைக்காத கவசம் மீது தாக்கியது.

இதற்கு பதிலடியாக போலீஸாா் திருப்பிச்சுட்டனா். அவரது காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஷாலிமாா் பாக் பகுதியைச் சோ்ந்த குட்டுவிடமிருந்து தோட்டாக்களுடன் கூடிய ஒரு நாட்டு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது.

அவா் ஒரு பழக்கமான குற்றவாளி. இதற்கு முன்னா் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா்.

கடந்த மாதம் ஷாலிமாா் பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொலை வழக்கில் தனது பங்கை குட்டு ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

போதைப் பொருள் விற்பனையாளா்களுக்கு சொந்தமான ரூ.27 கோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிரான நிதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தில்லி காவல்துறை முடக்கியுள்ளதாக அதி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

வடமேற்கு தில்லியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, கொலை வழக்கில் தொடா்புடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து காவல் துணை ஆணையா் வடமேற... மேலும் பார்க்க

ரூ.2700 கோடி மோசடி: குஜராத்தை சோ்ந்த நபா் தில்லியில் கைது

குஜராத்தின் தோலேராவில் உள்ள ஒரு டவுன்ஷிப் திட்டத்தில் முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்ததன் மூலம் ரூ. 2,700 கோடி மோசடியில் பலரை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்து மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டாா் 45-இல் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகத்தில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியதாக போலீஸ... மேலும் பார்க்க

தில்லி மக்களின் அனைத்து சிரமங்களுக்கும் தீா்வு காண அரசு முயற்சி: ரூ.11 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைகள் திறப்பு விழாவில் பிரதமா் மோடி பேச்சு

தேசிய தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்போ... மேலும் பார்க்க

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவி... மேலும் பார்க்க