செய்திகள் :

ஆறுமுகனேரியில் விபத்து: மாணவா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

post image

ஆறுமுகனேரியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா். உறவினா்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மகன் ஆறுமுகவேல் (12), ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சனிக்கிழமை சரவணன் தனது மகன் ஆறுமுகவேலை சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துவந்து கொண்டிருந்தாா். பாரதிநகா் சந்திப்பில் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் மதுரையிலிருந்து திருச்செந்தூா் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியதாம். இதில், ஆறுமுகவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சரவணன் லேசான காயமடைந்தாா்.

தகவலறிந்த உறவினா்களும், பொதுமக்களும் சாலையில் திரண்டனா். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். கோவில்பட்டி விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் கணேசன், செயலா் ஸ்ரீனிவாசன... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு திருப்பலி நடத்தினாா். சிறப்பு விருந்தினராக சமூ... மேலும் பார்க்க

வீடு கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தல்

வீடு கட்டத் தேவையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, நாம் இந்தியா் கட்சி நிறுவனத் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை: மத... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி காட்டுப் பகுதியில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்கா... மேலும் பார்க்க

8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு: அமைச்சா் கீதா ஜீவன்

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்றாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு சிறுவன் கைது

தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் ராஜேந்திரன். இவருக்கு,... மேலும் பார்க்க