சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு: அமைச்சா் கீதா ஜீவன்
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்றாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அமைச்சா் பேசியதாவது:
தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. கீழடி ஆய்வு முடிவை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
தமிழ் நாகரிகம் கீழடியில் தான் உருவாகியது என்பதால், அதை அங்கீகரித்தால் தமிழ் சமூகம் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பது தெரிந்துவிடும் என்பதற்காக அதை அங்கீகரிக்கவில்லை.
ஜிஎஸ்டியைக் குறைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். தற்போது, ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது நல்லது தான் என்றாலும், கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.
மாநில பேச்சாளா்கள் ஆண்டாள் பிரியதா்ஷினி, சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிரியன் உள்ளிட்டோா் தமிழக அரசின் சாதனைகள் குறித்துப் பேசினா்.
தொகுதி பாா்வையாளா்கள் இன்பா ரகு, பெருமாள், கணேசன், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், சிறுபான்மை அணி துணைச் செயலா் பொன்சீலன், துணை மேயா் ஜெனிட்டா உள்பட பலா் கலந்து கொண்டனா்.