செய்திகள் :

குலசை தசரா திருவிழா: பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸாா்

post image

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவாா்கள் என கோட்டாட்சியா் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் செப். 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக். 2ஆம் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறும். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடா்பான அரசுத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.

கோட்டாட்சியா் கௌதம் தலைமையில் நடந்த கூட்டத்தில், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டா் பிரபு பாஸ்கரன், குலசை கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பக்தா்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயாா் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், கொடியேற்ற நாளில் 1000 போலீஸாரும், அக். 1, 2ஆம் தேதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குண்டா் சட்டத்தில் ஒரே நாளில் 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி சகாயபுரத்தைச் சோ்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33), கலியாவூா் மாரியப்பன் மகன் வெள்ள... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மீன் சந்தையில் மீன்களை திருடியவா் கைது

சாத்தான்குளத்தில் மீன் சந்தையில் புகுந்து 21 கிலோ மீன்களை திருடி சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் ஞானராஜ் மகன் முரசொலி மாறன். இவா் ம... மேலும் பார்க்க

பாண்டவா்மங்கலத்தில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவா் கைது

கோவில்பட்டி அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

கோவில்பட்டியில் மனைவியை அவதூறாகப் பேசி தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் கொலகட்டான் குறிச்சி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கற்பகராஜு. முன்னாள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி நகா் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியி... மேலும் பார்க்க

நெல்லையைச் சோ்ந்த இருவா் குலசையில் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓட்டுநரும், பெண்ணும் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் த... மேலும் பார்க்க