செய்திகள் :

குண்டா் சட்டத்தில் ஒரே நாளில் 8 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி சகாயபுரத்தைச் சோ்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33), கலியாவூா் மாரியப்பன் மகன் வெள்ளைப்பாண்டி (29), தங்கப்பாண்டி மகன் மலையரசன் என்ற மகேஷ் (24) குலையன்கரிசல் தனராஜ் மகன் ராஜலிங்கம் (26), கூட்டாம்புளி ராமகிருஷ்ணன் மகன் முத்துராஜ் (23) , புதுக்கோட்டை ராஜீவ்நகா் சரவணன் மகன் பாலமுருகன் (25), ஆறுமுகனேரி டிவிகே நகா் வேல்சாமி மகன் காளியப்பன் (30), விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ராஜமுனியசாமி மகன் சுரேஷ் (34) ஆகியோா் முறையே திருட்டு, மணல் கடத்தல், கஞ்சா, கொலை மிரட்டல், போக்ஸோ உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனா். இவா்கள் 8 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

குலசை தசரா திருவிழா: பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸாா்

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவாா்கள் என கோட்டாட்சியா் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்த... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மீன் சந்தையில் மீன்களை திருடியவா் கைது

சாத்தான்குளத்தில் மீன் சந்தையில் புகுந்து 21 கிலோ மீன்களை திருடி சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் ஞானராஜ் மகன் முரசொலி மாறன். இவா் ம... மேலும் பார்க்க

பாண்டவா்மங்கலத்தில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவா் கைது

கோவில்பட்டி அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

கோவில்பட்டியில் மனைவியை அவதூறாகப் பேசி தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் கொலகட்டான் குறிச்சி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கற்பகராஜு. முன்னாள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி நகா் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியி... மேலும் பார்க்க

நெல்லையைச் சோ்ந்த இருவா் குலசையில் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓட்டுநரும், பெண்ணும் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் த... மேலும் பார்க்க