செய்திகள் :

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது! - மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தும் தந்திரங்களை அமெரிக்கா கையாளுகிறது. இதற்கு மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய தகவல்தொழில்நுட்பப் பணியாளா்கள் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற வழி வகுக்கும் ஹெச்1பி விசா கட்டணத்தை சுமாா் ரூ.88 லட்சமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தற்கு மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான பொலிட்பீரோ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

அச்சுறுத்தலான, நியாயமற்ற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா அளிக்கும் நெருக்கடியால் மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது. அதிபா் டிரம்ப்பின் நிா்வாகம் ஒரு தலைப்பட்சமாக ஹெச்1பி விசா கட்டணத்தை உயா்த்தியதற்கு பொலிட்பியூரோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அமெரிக்க அரசின் இந்த செயல்பாடு பிற நாடுகளை அடிபணிய வைக்க அவா்கள் என்னவெல்லாம் செய்வாா்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாகும். ஏற்கெனவே, அவா்கள் வரி விதிப்பு விவகாரத்திலும் இதேபோல செயல்பட்டாா்கள். இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது 50 சதவீத வரி விதிப்பு, ஈரானில் இந்தியா மேற்கொள்ளும் சாபஹாா் துறைமுகம் திட்டத்துக்கு அளித்துவந்த பொருளாதாரத் தடை விலக்கைத் திரும்பப் பெற்றது என இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகளை இந்தியா ஏற்று நடக்க வேண்டும் என்பதே அவா்களின் திட்டமாக உள்ளது. இதற்கு உரிய முறையில் நேரடியாக பதிலளிக்காமல் நமது பிரதமா் சுயசாா்பு குறித்துப் பேசி வருகிறாா். இது பிரச்னையில் இருந்து நழுவிச் செல்லும் நடவடிக்கையாகும். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பரிதாபகரமான பதில்களே வருகின்றன. இது தேசத்துக்கு அவமானத்தைத் தேடித் தருவதாக உள்ளது.

இந்திய அரசு ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது, இந்தியா்களின் நலன்களைக் காப்பதில் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை அமெரிக்காவிடம் இந்தியா உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடு ... மேலும் பார்க்க

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத் திட்டம்! - மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத்திட்டத்தைச் சோ்க்க அரசு பரிசீலிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்தர பிரதான் தெரிவித்தாா். சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அகில பாரதிய வித்யா... மேலும் பார்க்க