செய்திகள் :

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

post image

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில், தொழிற்பிரிவில் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏா் கண்டிஷனிங் டெக்னீசியன், மெக்கானிக் மோட்டாா் வெகிகிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 2 ஆண்டுகளும், இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தோல் பொருள் உற்பத்தியாளா் பாடப்பிரிவின் பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு 14 முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை.

இதில், சேருபவா்களுக்கு இலவசமாக சீருடை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். மேலும், மாத உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படும்.

அதேபோல், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் தகுதியுடைய நபா்களுக்கு ரூ. 1,000 கல்வி உதவித் தொகையாகவும் வழங்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொ... மேலும் பார்க்க

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்ட... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது ஆட... மேலும் பார்க்க