செய்திகள் :

"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்.. ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள். தொழிற்சாலை தொடங்க 45 நாளில் அனுமதி கொடுத்தோம்.

வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், ஒரு வீட்டைப் பூசிக் கூட குடியிருக்க முடியாத நிலைதான் வடமாநிலங்களில் உள்ளது.

பீகாரில் பா.ஜ.க-விற்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று தெரிந்ததால், 64 லட்சம் வாக்காளர்களை நீக்கியவர்கள். அடுத்து தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கின்றனர். ஆனால், அவர்களின் திட்டம் இங்கு நடக்காது.

ஏனென்றால், இங்குள்ள ஒவ்வொருவரும் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள். வரும் 2026-ம் வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்தால் மக்களை மட்டுமல்ல, கல்வியையும் காப்பாற்ற முடியாது.

இந்திய அளவில் உள்ள முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முன்னால் நிற்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்ளையால் புதிய ஆபத்து இந்தி திணிப்பு.

கடந்த, 1938-ல் தொடங்கிய மொழிப்போராட்டம் இன்றளவும் தொடர்கிறது. அதனால்தான், நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையாக நடந்தது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்

ஆனால், பா.ஜ.க அரசு கடந்த 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை. இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க நினைக்கிறார்கள். அதை நடக்கவிடமாட்டோம்.

அதேபோல், கடந்த 1989-ம் ஆண்டு விவசாயிகளுக்கு 13 லட்சம் இலவச மின்சாரம் இணைப்பு தந்தார் கலைஞர். இப்போது, தி.மு.க ஆட்சியில் 1.75 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உரிமை தொகை 1.15 கோடி பேருக்குக் கொடுக்கும் அரசு மாணவர்களுக்கு உயர்கல்விக்கும் உதவுகிறது. அன்புக்கரங்கள் திட்டம் தொடக்க விழாவில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் கண்ணீரோடுதான் இருந்தார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்... மேலும் பார்க்க

Saudi-Pak Defence Pact: பாதுகாப்பைத் தருமா சௌதி - பாகிஸ்தான் ஒப்பந்தம் ? | Detailed Analysis

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை , லண்டன்கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைபாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் கடந்த புதன் கிழமை ( செப்டம்பர் 17) செய்து கொண்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கு ஆசியா, தெற்கு ... மேலும் பார்க்க

Vijay: ``வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனா..." - விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி

பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் மீண்டும் பத்துக்கு, பத்து தொகுதிகளில் வெல்லப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தா... மேலும் பார்க்க

"விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமென்றால் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.கவிற்கு 2 வது இடத்திற்குதான் போட்டி. 2026 ச... மேலும் பார்க்க

"அதிமுக-வும், பாஜக-வும் ராமர், லட்சுமணன் போல" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

திமுக, தங்களுக்கு வேண்டுமென்றால் பாஜகவிற்கு வெண்குடை பிடிப்பார்கள், வேண்டாம் என்றால் கருப்பு பலூன் விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாக... மேலும் பார்க்க

பீகார்: "பிரதமரின் தாய் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்" - பாஜக பகிரும் வீடியோவின் பின்னணி என்ன?

பீகாரில், சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியை தாயை அவமதிக்கும் வகையில் பேசி... மேலும் பார்க்க