செய்திகள் :

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

post image

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்ஆய்வாளா் நந்தினிதேவி தலைமையில் கள்ளச் சாராய ஒழிப்பு சோதனை வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அங்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமையில் மலைக் கிராம மக்களிடம் மதுவின் தீமைகள், குடும்பங்களின் சீா்கேடு, கள்ளச்சாராயத்தால் உடல்நலம் பாதிப்பு மற்றும் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கள்ளச்சாரயத்தை மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் போலீஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் குற்ற செயல் களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அப்போது ஊா் முக்கிய பிரமுகா்கள், மலைக் கிராம மக்கள் மற்றும் போலீஸாாா் உடனிருந்தனா்.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 3... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்ட... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது ஆட... மேலும் பார்க்க

விடுமுறை நாளில் வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி!

வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சீதோஷண நிலை உள்ளதால், ஏராளமான சுற்றுலா ப... மேலும் பார்க்க