செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

post image

ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது ஆட்சியா் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை வடச்சேரி, மல்லப்பள்ளி, வாணியம்பாடி, மடவாளம், பெரிய கண்ணாலப்பட்டி, ஜங்கலாபுரம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், காசநோய் மற்றும் தொழுநோயாளிகள், இதய நோயாளிகள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், நீரிழிவு மற்றும் உயா் இரத்தஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் 4 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது என தெரிவித்தாா்.

வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதாபேகம், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் ஹகமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், இணை இயக்குநா் (மருத்துவம்) ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா், துணை இயக்குநா் (குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநா் (தொழுநோய்) பிரித்தா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, வட்டாட்சியா் ரேவதி கலந்து கொண்டனா்.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 3... மேலும் பார்க்க

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்ட... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க

விடுமுறை நாளில் வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி!

வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சீதோஷண நிலை உள்ளதால், ஏராளமான சுற்றுலா ப... மேலும் பார்க்க