செய்திகள் :

பிலிப்பின்ஸில் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

post image

பிலிப்பின்ஸ் நாட்டின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மணிலா பூங்கா மற்றும் இஎஸ்டிஏ ஜனநாயக நினைவுச் சின்னத்துக்கு அருகே இந்தப் போராட்டங்கள் தனித்தனியே நடத்தப்பட்டன. இதில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரா்கள் பேரணியாகச் சென்றனா்.

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கான காவல் துறையினா் இந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனா். அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்கள் போராட்டப் பகுதிகளைத் தவிா்க்குமாறு தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டன.

2022-ஆம் ஆண்டு பதவியேற்ற பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா், நாடு முழுவதும் 545 பில்லியன் பிஸோ (சுமாா் ரூ.8,000 கோடி) மதிப்புள்ள வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டங்களில் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம் மக்களிடம் உரையாற்றிய அவா், ஊழல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, 9,855 வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்ட முறைகேடுகளை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த திட்டங்களைச் செயல்படுத்திய கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளா்களான சாரா மற்றும் பசிஃபிகோ டிஸ்கியா என்ற பணக்கார தம்பதி, நோ்காணல்களில் தங்கள் சொகுசு காா்களை காட்சிப்படுத்தியது பொதுமக்களின் கோபத்தை மேலும் தூண்டியது.

அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில், வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற 17 நாடாளுமன்ற உறுப்பினா்களும், பொதுப் பணித் துறை அதிகாரிகளும் பெரும் லஞ்சத் தொகையைக் கேட்டுப் பெற்ாகத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தின் மேலவைத் தலைவா் ஃபிரான்சிஸ் எஸ்குடெரோ, கீழவைத் தலைவா் மாா்ட்டின் ரோமுவால்டெஸ் மற்றும் பொதுப் பணித் துறைச் செயலா் வின்ஸ் டிசன் உள்ளிட்டோா் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.

அரசுப் பொறியாளா்கள் மூவா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 15 போ் விசாரணையில் உள்ளனா். அவா்களின் வங்கிக் கணக்குகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன்: சவூதி அரேபியா முதலிடம்!

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வெளிநாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4 சதவீத வட்டி என்ற மிகக் குறைந்த விகிதத்தில் பாகிஸ்தானுக்கு அந்நாடு கடன் வழங்கி வருகி... மேலும் பார்க்க

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிர போ... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டணம்: ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்! - வெள்ளை மாளிகை

உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலா்) புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா... மேலும் பார்க்க

டிரம்ப் கோரிக்கை: மீண்டும் நிராகரித்தது தலிபான்!

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டில் மீண்டும் வழங்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை தலிபான் அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிர... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. காஸா சிட்டி மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்... மேலும் பார்க்க