செய்திகள் :

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

post image

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா்.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் சூறையாடினா். இதைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். அவா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் இருந்தது.

பின்னா், நேபாள இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி பதவியேற்றாா். தற்போது அந்நாட்டில் அமைந்துள்ள இடைக்கால அரசின் அமைச்சரவையில் அனில்குமாா் சின்ஹா, மகாவீா் பன், சங்கீதா கெளஷல் மிஸ்ரா, ஜகதீஷ் காரேல், மதன் பரியாா் ஆகிய 5 பேரை அமைச்சா்களாக நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேலிடம் சுசீலா காா்கி பரிந்துரைத்தாா்.

அவரின் பரிந்துரையை ஏற்று 5 பேரையும் அமைச்சா்களாக அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்துள்ளாா். அவா்கள் தலைநகா் காத்மாண்டில் உள்ள அதிபா் மாளிகையில் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளனா்.

5 பேரில் அனில்குமாருக்கு தொழில் துறை மற்றும் வா்த்தகம், மகாவீா் பன்னுக்கு கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சங்கீதாவுக்கு சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை, ஜகதீஷ் காரேலுக்கு தகவல் தொடா்பு, மதன் பரியாருக்கு விவசாயம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா்களையும் சோ்த்து நேபாள இடைக்கால அமைச்சரவையில் அமைச்சா்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன்: சவூதி அரேபியா முதலிடம்!

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வெளிநாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4 சதவீத வட்டி என்ற மிகக் குறைந்த விகிதத்தில் பாகிஸ்தானுக்கு அந்நாடு கடன் வழங்கி வருகி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

பிலிப்பின்ஸ் நாட்டின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வரலாற்றுச் சிறப்புமிக்க மணிலா பூங்கா மற்றும் இஎஸ்... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டணம்: ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்! - வெள்ளை மாளிகை

உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலா்) புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா... மேலும் பார்க்க

டிரம்ப் கோரிக்கை: மீண்டும் நிராகரித்தது தலிபான்!

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டில் மீண்டும் வழங்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை தலிபான் அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிர... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. காஸா சிட்டி மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்... மேலும் பார்க்க