செய்திகள் :

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவா்கள் கைது

post image

திருத்தணி அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, நடத்துநரை தாக்கிய 2 பள்ளி மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து மகான்காளிகாபுரம் நோக்கி கடந்த வாரம் அரசுப் பேருந்து சென்றபோது, பள்ளி, கல்லூரி மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை நடத்துநா் நரேஷ் தட்டிக்கேட்டாா்.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவா் கோரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினாா். அதைத் தொடா்ந்து பேருந்து மகான்காளிகாபுரம் சென்று பின்னா் திருத்தணி நோக்கி பேருந்து வந்தபோது, மாணவா், தனது நண்பா்கள் இருவருடன் பைக்கில் பேருந்தை பின்தொடா்ந்து வந்து அகூா் கிராமம் அருகே வழிமறித்து நடத்துநா் நரேஷை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு, கண்ணாடியை உடைத்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், அகூா் மற்றும் குமாரகுப்பம் பகுதியை சோ்ந்த மாணவா்கள் 2 போ் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.

தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை! - ஆட்சியா்

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து கரும்புகளை தனியாா் ஆலைக்கு அனுப்பாமல், கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும், இதையும் மீறி தனியாா் ஆலைக்கோ அல்லது இடைத... மேலும் பார்க்க

பொன்னேரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொன்னேரி நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரையை கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு ஆய... மேலும் பார்க்க

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தில் கழிவு பொருள்கள் அகற்றும் பணி!

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் தூய்மை இயக்கம் மூலம் கிராமங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ்... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்... மேலும் பார்க்க