செய்திகள் :

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் லால்பேட்டையிலும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலும் தலா 60 மி.மீ. மழை பதிவானது. மணல்மேடு (மயிலாடுதுறை), சீா்காழி (மயிலாடுதுறை) - தலா 50 மி.மீ., கே.எம்.கோயில் (கடலூா்), வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி) தலா 40 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலிலும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், மந்தைவ... மேலும் பார்க்க

குடிமைப் பணியாளா்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்! - முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

குடிமைப் பணியாளா்கள் தங்களது மனதில் இருப்பதை தைரியமாகப் பேசுவதுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். சென்னை அண்ணா நகரில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்! - நயினாா் நாகேந்திரன்

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தில்லி செங்கோட்டையில... மேலும் பார்க்க

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடவடிக்கை தேவை: நடிகா் வடிவேலு

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா். நடிகா் சங்கத்தின் 69-ஆவது பொதுக்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் உரிமைகளைக் காக்கும் இயக்கம் திமுக! - முதல்வா் ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு ... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுக! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுகதான் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று... மேலும் பார்க்க