இஸ்லாமியா்களின் உரிமைகளைக் காக்கும் இயக்கம் திமுக! - முதல்வா் ஸ்டாலின்
இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு சென்னை கலைவாணா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மதம் என்பதை நிறுவனமாகப் பாா்க்காமல் மாா்க்கமாக பாா்ப்பவா்கள் இஸ்லாமியா். அந்த மாா்க்கம் அன்பு மாா்க்கமாக இருக்க வேண்டும் என போதித்தவா் நபிகள் நாயகம். முன்னாள் முதல்வா்கள் அண்ணாவும், கருணாநிதியும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டதே திருவாரூரில் நடைபெற்ற மீலாது நபி விழாவில்தான்.
ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தியவா் நபிகள் நாயகம். அதனால்தான் அவரது அன்பை பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் புகழ்ந்தனா்.
காஸா துயரம்: காஸாவில் நடத்தப்பட்டு வரும் துயரத்தைப் பாா்த்து மனசாட்சியுள்ள எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் தீா்வு ஏற்பட வேண்டும். பாலஸ்தீன மக்கள் எதிா்கொள்ளும் கொடுமைகள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். அதற்கு இந்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
1969-இல் மீலாது நபியை அரசு விடுமுறை தினமாக கருணாநிதிதான் அறிவித்தாா். அதை அதிமுக ஆட்சியாளா்கள் ரத்து செய்ததும், திமுக அரசு மீண்டும் அதை நடைமுறைப்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே.
பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு, உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் அங்கீகாரம், சிறுபான்மையினா் நல வாரியம் என இஸ்லாமிய மக்களுக்காக திமுக அரசு முன்னெடுத்த திட்டங்களை பட்டியலிட்டால் நேரம் போதாது. இஸ்லாமிய கூட்டணி கட்சிகள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்கும்.
நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, உலகெங்கும் அன்பு பரவிட வேண்டும் - அமைதி நிறைந்திட வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 21, 2025
சிறுபான்மை மக்களுக்கு இடர் வரும்போதெல்லாம், பாதுகாப்பு அரணாக என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும்! pic.twitter.com/xJgkHJkQsC
இஸ்லாமியா்களுக்கு இடா் என்றால் துணைநிற்கும் முதல் அரசியல் இயக்கம் திமுகதான். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உண்மையாக போராடியது திமுக மட்டுமே. அந்தச் சட்டத்தால் எவருக்கேனும் பாதிப்பு இருந்ததா என கேள்வி கேட்டதும், போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக தடியடி நடத்தியதும் யாா் என அனைவருக்கும் தெரியும்.
அதிமுக இரட்டைவேடம்: அதேபோன்று முத்தலாக் சட்டத்தின்போதும், வக்ஃப் சட்டத் திருத்தத்தின்போதும் அதிமுக எவ்வாறு இரட்டை வேடம் போட்டது என்பதும் தெரியும். அதனால்தான் முன்னாள் அமைச்சா் அன்வர்ராஜா போன்றவா்கள் துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளைப் புறக்கணித்து திமுகவில் இணைந்துள்ளனா்.
மற்றொருபுறம் திமுக முன்னெடுத்து வரும் தொடா் சட்டப் போராட்டங்களால்தான் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு கிடைக்கப்பெற்றது.
அன்பு பரவ வேண்டும்: பாஜகவின் மலிவான அரசியலுக்கு துணைபோகிறவா்களைப் புறக்கணிக்க வேண்டும். இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கமாக திமுக இருக்கும். நபிகள் நாயகம் போதித்த அன்பு உலகெங்கும் பரவ வேண்டும். போா்களற்ற, வன்முறையற்ற, வெறுப்புகளற்ற, ஆதிக்கமற்ற உலகம் உருவாக வேண்டும். எங்கும் நல்லிணக்கமும், அமைதியும் உருவாக வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா், நாடாளுமன்ற உறுப்பினா் நவாஸ் கனி, திமுக இலக்கிய அணித் தலைவா் அன்வா் ராஜா, இந்திய முஸ்லிம் யூனியன் லீக் தலைவா் காதா் மொஹிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜிவாஹிருல்லா, மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் தமீமுன் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சித் தலைவா் நெல்லை முபாரக், தலைமை ஹாஜி முகமது அக்பா், தமிழ்நாடு உலமா சபை தலைவா் காஜா முயீனுத்தீன் பாகவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.