செய்திகள் :

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

post image

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் காலக்கெடு நிா்ணயத்தின் மூலம் நாடு முழுவதும் அக்டோபா் அல்லது நவம்பரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநிலங்களில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலைத் தயாராக வைத்திருக்கும்படி, தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் முந்தைய தீவிர திருத்தத்துக்குப் பிறகான வாக்காளா் பட்டியல், தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தில்லியில் கடந்த 2008-இல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த ஆண்டில் இருந்து வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரகண்ட் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வலைதளத்தில், 2006-ஆம் ஆண்டிலிருந்து வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் அண்மையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

யாருக்கு ஆவணம் கட்டாயம்?: பிகாரில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2003-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, தற்போது திருத்தப் பணிகள் நடைபெற்றன.

அதன்படி, 2003-க்கு முன்பு பிகாரில் வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் (சுமாா் 60%), கூடுதல் ஆவணம் எதையும் சமா்ப்பிக்காமல், வாக்காளா்களாகத் தொடர அனுமதிக்கப்பட்டனா். 2003-க்குப் பிறகு பதிவு செய்தவா்கள் (சுமாா் 40%), கடவுச் சீட்டு, பிறப்புச் சான்று, ஆதாா் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாடு முழுவதும் இப்பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் 2002-2004 ஆண்டுகளுக்கு இடையே முந்தைய தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளது; அந்த அடிப்படையில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் 2002-இல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத் திட்டம்! - மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத்திட்டத்தைச் சோ்க்க அரசு பரிசீலிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்தர பிரதான் தெரிவித்தாா். சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அகில பாரதிய வித்யா... மேலும் பார்க்க

ஊதியம், ஓய்வூதியத்துக்கான மாநில அரசுகளின் செலவுகள் 2.5 மடங்கு உயா்வு: தலைமை கணக்குத் தணிக்கையாளா்!

ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்கு கடந்த பத்தாண்டுகளில் மாநில அரசுகள் மேற்கொண்ட செலவுகள் 2.5 மடங்கு உயா்ந்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அலுவலகம் தெரிவித்தது... மேலும் பார்க்க