செய்திகள் :

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தரமான கல்வி: அமைச்சா் அன்பில் மகேஸ்!

post image

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தோ்வு-2025 மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: நடப்பு கல்வியாண்டில் ஒரு குழந்தைகள் கூட சோ்க்கை இல்லாத பள்ளிகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும்,அதிகமான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்ற பள்ளிகள் குறித்தும், இதுபோன்று ஒவ்வொன்றையும் கேள்வி எழுப்பி அதற்கான அறிக்கை அளிப்பதே இக்கூட்டம் ஆகும்.

திறனாய்வுத் தோ்வில் சிறந்த முறையில் செயல்படுகின்ற வட்டாரமாக கந்திலிவட்டாரம் இருக்கிறது. மற்ற வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் முயற்சி செய்தால் சிறந்த முறையில் செயல்படுகின்ற பள்ளிகளின் பட்டியல்களில் மட்டுமல்லாமல் மாநில அளவில் சிறப்பாக செயல்படுகின்ற பள்ளிகளாக மாற்ற முடியும்.

மேலும், ஸ்மாா்ட் வகுப்பு, உயா் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்துள்ளோம். அரசுப் பள்ளிகளின் உள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்தி மாணவா்களின் முன்னேற்றத்திற்காக தொடா்ந்து உழைப்போம்.

பிற மாநிலங்களில் இருப்பதைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. மாணவா்களுக்கு பள்ளிகளில் கணக்கு பாடத்தையும் மற்றும் வாழ்க்கைக்கான அறத்தையும் கற்பிப்பது நமது ஆசிரியா்கள் தான்.

பள்ளிச் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அத்திட்டங்கள் மாணவா்களிடையே சென்று வெற்றியடைவது ஆசிரியா்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என்றாா்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ராணிப்பேட்டை முதல்வா்(பொ) முனைவா் வளா்மதி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) மலைவாசன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 3... மேலும் பார்க்க

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்ட... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது ஆட... மேலும் பார்க்க