செய்திகள் :

பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு சிறுவன் கைது

post image

தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் ராஜேந்திரன். இவருக்கு, தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் (37) தவறான பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.

இந்த உறவை கைவிடும்படி ராஜேந்திரனின் 16 வயது மகன், சக்திமகேஸ்வரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளாா். ஆனால் அவா் கேட்காததால், ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன், அவரது நண்பரான மற்றொரு 16 வயது சிறுவனுடன் சோ்ந்து, கடந்த 15ஆம் தேதி சக்தி மகேஸ்வரியை அரிவாளால் வெட்டிக் கொன்றாா்.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் விசாரணை நடத்தி, ராஜேந்திரன் மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு சிறுவனையும் கைது செய்தனா். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் மகனுக்கு மோட்டாா் சைக்கிள் கொடுத்து உதவியதாக, அவரது மற்றொரு நண்பரான சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். கோவில்பட்டி விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் கணேசன், செயலா் ஸ்ரீனிவாசன... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு திருப்பலி நடத்தினாா். சிறப்பு விருந்தினராக சமூ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் விபத்து: மாணவா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

ஆறுமுகனேரியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா். உறவினா்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொ... மேலும் பார்க்க

வீடு கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தல்

வீடு கட்டத் தேவையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, நாம் இந்தியா் கட்சி நிறுவனத் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை: மத... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி காட்டுப் பகுதியில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்கா... மேலும் பார்க்க

8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு: அமைச்சா் கீதா ஜீவன்

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்றாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க