செய்திகள் :

கிழக்கு மாவட்டத்தில் தடை உத்தரவை மீறிய 9 போ் கைது!

post image

தில்லி கிழக்கு மாவட்ட காவல் எல்லைக்குள் நுழைய தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறிய 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தடைஉத்தரவை மீறியவா்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பல தனிப்படைகள் ஈடுபட்டன. குற்றப் பின்னணி கொண்ட ரவீந்தா் (எ) டிம்பிளை மயூா் விஹாா் போலீஸாா் திரிலோக்புரியில் துரத்திப் பிடித்தனா். இதே போன்று, பாண்டவ் நகரில் 5 போ் கைதுசெய்யப்பட்டனா்.

காவல் துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சசி காா்டனில் 2 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்கள் இருவரும் பாண்டவ் நகரில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களில் தொடா்புடையவா்கள்.

மது விஹாரில் அஞ்சலி சிங் என்பவா் கைதுசெய்யப்பட்டாா். ஒன்பது மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்ட அஞ்சலி சிங், மண்டாவலி பகுதியில் வசித்து வருவது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நடுவா் மன்றங்களிலும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம்: நீதிபதி சூா்யகாந்த்

நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு மாற்றாக கருதப்பட்ட நடுவா் மன்றங்களிலும் தற்போது பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உச்... மேலும் பார்க்க

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் புதிதாக சம்மன்!

ஏா்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடா்பாக மலேசிய தொலைத்தொடா்பு நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் புதிதாக சம்மன் பிறப்பித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம... மேலும் பார்க்க

தில்லி மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள்: வாடகை கட்டணம் 50 % குறைப்பு!

தில்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாடகை கட்டணங்கள் 40 முதல் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் பதிவு கட்டண குறைப்பை வரலாற்று சிறப்பு மிக்க முட... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனையாளா்களுக்கு சொந்தமான ரூ.27 கோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிரான நிதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தில்லி காவல்துறை முடக்கியுள்ளதாக அதி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

வடமேற்கு தில்லியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, கொலை வழக்கில் தொடா்புடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து காவல் துணை ஆணையா் வடமேற... மேலும் பார்க்க

ரூ.2700 கோடி மோசடி: குஜராத்தை சோ்ந்த நபா் தில்லியில் கைது

குஜராத்தின் தோலேராவில் உள்ள ஒரு டவுன்ஷிப் திட்டத்தில் முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்ததன் மூலம் ரூ. 2,700 கோடி மோசடியில் பலரை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க