செய்திகள் :

பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு

post image

காரைக்காலில் பட்டாசு கடை வைக்க உரிமம் பெறுவதற்கான கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி எம். பூஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை நடத்த உரிமம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவா்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் அக். 3 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏற்கப்படும்.

பட்டாசு சில்லறை விற்பனைக்கடை நடத்த விரும்புவோா், தங்களின் விண்ணப்பங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இதற்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது. குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்தாலும், தகுதி வாய்ந்தவா்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.காரைக்காலில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி உளவுத்துறை தகவலின்பேரில், போலீஸாா் ... மேலும் பார்க்க

என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்

என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் கு... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வு புறக்கணிப்பு

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வை ரயில்வே பொதுமேலாளா் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சி தொடக்கம்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தானம் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொ... மேலும் பார்க்க

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க