செய்திகள் :

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வு புறக்கணிப்பு

post image

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வை ரயில்வே பொதுமேலாளா் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் ரயில் நிலையத்தை அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்த ரூ. 5.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த நவ. 2023-இல் தொடங்கிய திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பாா்வையிடும் அட்டவணை வெளியானது. இதில் காரைக்கால் ரயில் நிலையமும் இடம் பெற்றிருந்தது.

ரயில்வே பொது மேலாளா் வருகையால் காரைக்கால் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும் காரைக்கால் வருகை தரும்போது, அவரிடம் சில கோரிக்கைகளை நேராக முன்வைக்க எம்.எல்.ஏ.க்கள், பொது நல அமைப்பினா் காத்திருந்தனா்.

அனைத்து ரயில்வே நிலையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள ரயில்வே சங்கத்தின் நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற பொது மேலாளா், காரைக்கால் ரயில் நிலையம் வருகையை மட்டும் ரத்து செய்துவிட்டாா்.

காரைக்கால் வருகை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டது உறுதியாக தெரிகிறது. பொது மேலாளரின் ஒருதலைப்பட்சமான செயல்பாடு குறித்து ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.

என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்

என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் கு... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சி தொடக்கம்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தானம் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொ... மேலும் பார்க்க

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க

போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க